தீபாவளி வாழ்த்துக்கள்

ங்கா-ஸ்நானம் செய்து , பலகாரம் சாப்பிட்டு , பட்டஸும் வெடிது முடித்தாகிவிட்டது. களைப்பாகத் தான் இருக்கும். அக்கடா என்று சற்று தலை சாய்க்கலாம் என்றால் பக்கத்து வீட்டு பசங்கள் வைக்கும் பட்டாசும், பல-பலகாரங்கள் உட்கொண்ட நமது வயிறும் பாடாய் படுத்தும்.
பக்கத்து வீட்டுப் பையனை திட்டமுடியாது (நம்து வாண்டுகளும் சேர்ந்து அல்லவா கொட்டம் அடிக்கிரார்கள்).ஆனால் எல்லா பலகாரங்களையும் ருசி பார்த்த நாவிற்க்கும் வயிற்றுக்கும் மிக முக்கியமான ஒன்றை கொடுக்க மறந்து விடுகிரோம் – ” தீபாவளி மருந்து “.

ஆஹா இது சாப்பிட்ட பிறகு நமது வயிறு நம்மை வாழ்த்துவது நன்றே உணரலாம். ( பக்கத்தில் இருப்பவரை கேளுங்கள் – உங்கள் குறட்டை பட்டாசை விட பலமாக இருக்கும்).” தீபாவளி மருந்து ” ல் என்ன ச்வாரஸ்யம் என்றால் இது செய்வது சுலபம், பொதுவாக எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால் தீபாவளியின் போது மட்டுமே நினைவுக்கு வரும். வருஶத்துக்கு ஒரு தடவை தான் பண்ணுவோம்.

இதே போல் வருஶத்துக்கு ஒரு முறை மட்டுமே செய்யும் இன்னொரு சிற்றுண்டி – காரடயான் நோம்புக்கு (இதை சாவித்ரி நோம்பு என்றும் சொல்வார்கள்) கடவுளுக்கு படைக்கும் “நோம்பு-அடை”.இதை சாப்பிட்டவர்களை கேட்டால் தெரியும் அதன் சுவைய்யை நினைத்தாலே சப்புக்கொட்ட வைக்கும்.

யாரை குறை சொல்வது — செய்துதாருங்கள் என்று கேட்க மறந்து விடுவதையா ? … தினம்-தினம் இருக்கும் வேலை பளுவில் இதுவேற.. என்ற நினைப்பையா ? … நாமே சமயல்க்குறிப்பை வைத்து செய்து தான் பார்ப்போமே.. என்று நினைக்காத நம் சோம்பேரித்தனத்தையா ??? …

இதில் நீங்கள் என்த ரகம் ?. உங்கள் வீட்டில் “தீபாவளி மருந்து” & “நோம்பு-அடை” அடிக்கடி செய்வீர்களா ..செய்வார்களா..செய்யச்சொல்வீர்களா ? ? ?

6 Replies to “தீபாவளி வாழ்த்துக்கள்”

  1. Frankly i tried several ways i have lernt in these 42 years of my life to write and publish comments in Tamizh. WIll still try. Till then Happy Diwali

  2. பரஹ மென்பொருள் கிடைக்கபெற்றேன். இது வழியாக தமிழில் உரையாடவும் என் எண்ணங்களை பதியவைக்கவுமுள்ள திறனை கைக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் விரல் சூண்டி வழிகாட்டின நண்பர் தீபா அவர்களுக்கு நன்றி வணக்கம்

  3. தமிழில் எழுதுவதும் பிற தமிழர்களுடன் தத்தம் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுவதிலும் பிட்ஸாவையும் பர்கரையும் ஒதுக்கி தேங்காய்ப்பாலையும் இடியாப்பத்தையும் நிலத்திலமர்ந்து வாழையிலையில் இருந்து வெறும் கைகளால் எடுத்து உண்ணும் சுகம் அ!நுபவிக்கும் ஒரு சாதாரணத்தமிழனாக, கருப்புக்கண்ணாடி அணிந்து மாட்டுக்கறி உண்ணும் திராவிடரிடமிருந்தும் திருநீறணிந்து வடமொழியில் தொழும் ஆரியர்களிடமிருந்தும் விலகி தாய்த்தமிழை அம்மையாக, ஏற்ற்ம்தரும் முலைப்பாலாக, அன்னையாக வணங்க வாய்ப்புத்தந்த தீபாவுக்கும், கணனிக்கும் காவிரியில் அணைகட்டி தடுத்த கன்னட சகோதரன் திட்டப்படுத்திய பரஹ மென்பொருளுக்கும் வணக்கம். இன்னும் எழுதுவேன்

  4. பல ஆயிரங்காலங்காலங்களாக நாமனைவரும் பேசி எழுதி படித்து உணர்ண்து களிக்கும் தமிழெனும் அமுதை தனதென்று அபகரித்து நம்போன்ற இனபலரை ஆரியரென்றும் பார்ப்பனரென்றும் இகழ்ன்து இவ்விகழலால் பெற்ற வாக்குக்களால் தாய்நாட்டை ஆண்ட துரோகிகளை நினைத்து அழவா, இத்த்ரோகிகளை பார்த்து பேடித்து பம்பாயிலும், டில்லியிலும், கொல்கத்தாவிலும் ஓடியொளிந்து அன்னியனுக்காக அல்லல்பட்டு அன்னியருக்காக சொத்துச்சேர்த்து தேய்ந்துபோன பார்ப்பனருக்காக அழவா, தன் சொந்த மக்களான பார்ப்பனர் நாடுவிட்டு நாடு போய் நாயடிபட்ட கூத்தைக்கண்டு கண்ணீர்விட்ட தாய்த்தமிழைக்காகக அழவா, ஔவ்வை ஆண்ட தமிழர் இதயத்தை இத்தாலியச்சி அன்னை சோனியாவிர்க்கு அடைமானம் வைத்துக்கொடுத்த ஜீன்ஸணிந்து பிட்ஸாவுண்டு சண் டீவி தமிழ் பேசி துள்ளி நடக்கும் இளைய தமிழ் தலைமுறைக்காக அழவா, தமிழ்நாட்டில் யாருக்காக அழ தோழி தீபா? ஆங்கிலத்தில் அழுத விருப்பப்பட்டல்ல! ஆனால் அய்யரெனும் பெயரை வைத்துக்கொண்டு தமிழில் எழுதினால் எவன் படிப்பான் தோழி? திராவிட சகோதரரால் நாடு கடத்தப்பட்டு ஆங்கிலக்காட்டில் அலைகிறேன், அழுகிறேன். என் தாயிடமிருந்து என்னை பிரித்த என் கருப்புக்கண்ணாடிச்சகோதரர்களால் அடிபட்டு ஆங்கிலம் பேசுகிறேன், எழுதுகிறேன், மன்னிப்பீராக!

  5. பல ஆயிரங்காலங்காலங்களாக நாமனைவரும் பேசி எழுதி படித்து உணர்ந்து களிக்கும் தமிழெனும் அமுதை தனதென்று அபகரித்து நம்போன்ற இனபலரை ஆரியரென்றும் பார்ப்பனரென்றும் இகழ்ந்து இவ்விகழலால் பெற்ற வாக்குக்களால் தாய்நாட்டை ஆண்ட துரோகிகளை நினைத்து அழவா, இத்த்ரோகிகளை பார்த்து பேடித்து பம்பாயிலும், டில்லியிலும், கொல்கத்தாவிலும் ஓடியொளிந்து அன்னியனுக்காக அல்லல்பட்டு அன்னியருக்காக சொத்துச்சேர்த்து தேய்ந்துபோன பார்ப்பனருக்காக அழவா, தன் சொந்த மக்களான பார்ப்பனர் நாடுவிட்டு நாடு போய் நாயடிபட்ட கூத்தைக்கண்டு கண்ணீர்விட்ட தாய்த்தமிழைக்காக அழவா, ஔவ்வை ஆண்ட தமிழர் இதயத்தை இத்தாலியச்சி அன்னை சோனியாவிர்க்கு அடைமானம் வைத்துக்கொடுத்த ஜீன்ஸணிந்து பிட்ஸாவுண்டு சண் டீவி தமிழ் பேசி துள்ளி நடக்கும் இளைய தமிழ் தலைமுறைக்காக அழவா, தமிழ்நாட்டில் யாருக்காக அழ தோழி தீபா? ஆங்கிலத்தில் எழுத விருப்பப்பட்டல்ல! ஆனால் அய்யரெனும் பெயரை வைத்துக்கொண்டு தமிழில் எழுதினால் எவன் படிப்பான் தோழி? திராவிட சகோதரரால் நாடு கடத்தப்பட்டு ஆங்கிலக்காட்டில் அலைகிறேன், அழுகிறேன். என் தாயிடமிருந்து என்னை பிரித்த என் கருப்புக்கண்ணாடிச்சகோதரர்களால் அடிபட்டு ஆங்கிலம் பேசுகிறேன், எழுதுகிறேன், மன்னிப்பீராக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *